தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

சோப்புக்காக போராடாத பெண்கள்...

Thursday, August 28, 2008

தற்போது பெட்ரோல் விலை உயர்வு என்னமோ 15 சதவீதம் தான். ஆனால் இதை மையமாக வைத்து அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் 45 முதல் 60 சதவீதம் வரை விலையை உயர்த்தி விட்டார்களே இது என்ன நியாயம்?

போக்குவரத்து செலவு அதிகம் என்பதை காரணம் காட்டி 9 ரூபாய்க்கு விற்ற சோப் இப்போது ரூ.13., 7 ரூபாய் பிஸ்கெட் ரூ.10., 10ரூபாய் பேஸ்ட் 15., பேனா, பென்சில், காகிதம் என எல்லா பொருட்களுக்கும் 60 சதவீதம் வரை விலையேற்றிவிட்டார்கள். இதையெல்லாம் யாரை கேட்டு செய்கிறார்கள்?

பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறோம். அரசாங்கமும் ஏதோ பதிலாவது சொல்கிறது. ஆனால் பல பொருட்களின் விலை உயர்வு குறித்து யாரை கேட்பது? யார் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்?

பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் பணவீக்கம் என்றெல்லாம் காரணம் காட்டி தனி அரசாங்கம் நடத்துகிறார்கள் பெரும் முதலாளிகள். அந்த அரசாங்கத்தில் நாம் எல்லோரும் அடிமைகளாக இன்னும் சொன்னால் கொத்தடிமைகளாக இருக்கிறோம்.

காய்கறி, மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் விலை உயர்கிறது என்றால் விளைச்சல் குறைவு என்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் எதற்காக விலையேற்றிக்கொண்டார்கள்?

போக்குவரத்து செலவு அதிகம் எனகிறார்கள். அப்படியானால் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ற போல் தானே விலையேற்றமும் இருக்க வேண்டும்.

போக்குவரத்து, வரி, விளம்பர செலவு என அனைத்து சுமைகளையும் நுகர்வோர் தலையிலேயே கட்டி விடும் முதலாளிகள், தங்கள் லாப சதவீதத்தை மட்டும் குறைத்துக்கொள்ள முன்வருவதில்லை.

இவர்களை கட்டுப்படுத்த அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தயங்குகிறார்கள். பணத்தை கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாயை அடைததுவிட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் இந்திய நுகர்வோர் தலையில் மிளகரைத்து விடலாம் என்பது தான் நிதர்சன உணமையாக இருக்கிறது.

அடிப்படை பொருட்கள் இப்படி கட்டுக்கடங்காமல் விலையேறிக்கொண்டிருக்க வாயில் ஆயில் பூலிங் தேவையா? இதையெல்லாம் ஏன் மக்கள் யோசிக்க மறுக்கிறார்கள்?

விளம்பரம் தேவை தான் அதற்காக ஒட்டுமொத்த முதலீட்டையும் விளம்பரத்தில் முடக்கிவிடுவது வியாபார தருமமாகுமா?

1 ரூபாய் தானே என அலட்சியப்படுத்தி., 100% விலைஉயர்வை நாம் மறந்துவிடுகிறோம்.

இன்று ஒரு பொருளுக்கு அரசு வரிஉயர்வு விதிக்கிறது என்றால் சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் தான் எதிர்த்து போராடுகிறார்கள். முதலாளிகள் வாயே திறப்பதில்லை. காரணம் வரி என்பது அவர்கள் லாபத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. எல்லா சுமையையும் நுகர்வோர் தலையியே கட்டி விடுகிறார்கள். ஆனால் வருமானவரி அதிகப்பு, வருமானஉச்சவரம்பு இதைபற்றி அரசு பேச்சு எடுத்தாலே உடனே கூக்குரல் இடுகிறார்கள் பெரும் முதலாளிகள்.

இன்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை எதிர்த்து பங்க உரிமையாளர்களும் பொது மக்களும் தான் போராடிக்கொண்டிருக்கிறார்களே தவிர எண்ணை நிறுவனங்கள் வாயே திறப்பதில்லையே ஏன்?

சிறுமுதலீட்டாளர்கள் தங்கள் பொருட்களுக்கு குறைந்த லாபத்தையே நிர்ணயிக்கிறார்கள். ஆனால் பெரும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைந்தபட்சமே 50% மேல் தான் வைத்துளளன. இதை தட்டிக்கேட்க எந்த அரசியல்வாதியோ, நுகர்வோர் அமைப்போ இல்லை.
இதே நிலை நீடித்தால் சிறு முதலீட்டாளர்கள் அழிவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களுமே பெரும் முதலாளிகளின் அடிமைகளாகும் சூழல் வந்துவிடுமே.

வருமானத்துக்கு மட்டுமல்ல ஒரு பொருளின் லாபவிகிதத்திற்கும் அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அதை முறையாக கண்காணித்து செயல்படுத்தவும் வேண்டும்.

குடிநீருக்காக போராடி சாதனை படைத்த பெண்களே கொஞ்சம் சோப்புக்காகவும் யோசியுங்க...

Read more...

போலீசுக்கு எதுக்கு இந்த பொழப்பு?

Saturday, August 9, 2008

சுதந்திர போரட்டங்களை கண்டதும் அடித்து உதைக்கவும் மிரட்டி துன்புறுத்தவும் போலீஸ் கையில் லத்தியை கொடுத்தது ஆங்கில அரசு. கட்டபஞ்சாயத்து நடத்தவும் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஜட்டியுடன் நிறுத்தி உதைக்கவும், அப்பாவிகளிடம் அதிகாரத்தை காட்டவும் லத்தியை உபயோகிக்கிறது இன்றைய போலீஸ்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ளது எரத்திபாலம். இந்த பகுதியை சேர்ந்த ஜோமேசும், ரத்தன் லால் என்பவரது மகள் பிரியாவும் காதலித்துள்ளார். பிரியா பணக்கார வீட்டு பெண். ஜோமேஸ் பரமஏழை. வழக்கப்போல காதலி விட்டில் எதிர்ப்பு கிளம்பவே திருமணம் செய்து கொள்ள இருவரும் தலைமறைவானார்கள்.

பெண் வீட்டார் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை ஏவினர். ஜோமேஸ்சின் குடும்பத்தை மிரட்டி சகோதரன் ஜோபி, தாய், தந்தை, நண்பர்கள் என அத்தனைபேரையும் தெருவில் இழுத்து சென்றது போலீஸ். காதலர்கள் எங்கே என கேட்டு இவர்களை அடித்து உதைத்துள்ளனர். ஏழைக்கு தான் கேட்க நாதியில்லையே. ஒருவாரம் லாக்கப்பில் வைத்து அடித்துள்ளனர். எப்.ஐ.ஆரும் போடவில்லை, கோர்ட்டுக்கும் கொண்டு செல்லவிலலை.

சம்பவத்தை அறிந்த காதலர்கள் புதுமணத்தம்பதிகளாக காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தங்கள் பதிவு திருமணம் செய்த சான்றிதழ்களை காட்டியும் இரக்கம் காட்டவில்லை போலீஸ். தாய், தம்பி நண்பர்களை விட்டுவிட்டு தம்பதிகளை லாக்கப்பிலாக்கியது போலீஸ். தொடர்ந்து இரவு முழுவதும் ஜோமேசுக்கு அடி உதை. பிரியாவுக்கு மனம்மாற வற்புருத்தல்.

குற்றுயிரும் குலையுயிருமாக வெளியே வந்த தாயும் சகோதரன் ஜோபியும் அவமானமும் வலியும் தாங்காமல் கடந்த புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கினர். இதில் தாயை காப்பாற்றிவிட்டனர் அக்கம்பக்கத்தினர்.
பிணமாக தூக்கில் தொங்கிய ஜோபியின் உடல் முழுவதும் ரத்தகாயம் ஏற்பட்டு கந்திபோய் இருந்தது. அணிந்திருந்த பேண்டுக்கு வெளியே ரத்தம் கசிந்து உறைந்திருநதது. முகத்திலும் முதுகிலும் கையிலும் தலையிலும் ஒரு இடம் கூட பாக்கியில்லை.

இந்த அளவுக்கு ஒருமனிதனை, ஒரு உயிரை அடித்து துன்புருத்த இவர்கள் யார்? ஒரு நாட்டின் பிரதமார், உச்சநீதிமன்ற நீதிபதி, ஏன் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே இல்லாத ஒரு அதிகாரத்தை இவர்கள் கையில் யார் கொடுத்தது? கட்டபஞ்சாயத்து தான் காவல் துறையின் எழுதப்பாடாத சட்டமா?

ஜோபியின் மரணத்தை கேட்டதும் பதறியடித்து கொண்டு தம்பதிகளை கோர்ட்டில் ஒப்படைத்தது போலீஸ். கோர்ட்டும் இருவரும் மேஜர் என்றும் திருமணம் செல்லும் எனவும் அறிவித்தது. இந்தனையும் நடந்தும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோழிக்கோடு தெற்கு துணை கமிஷ்னர் உட்பட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டும் தானாம்?

இப்போது இழந்த அப்பாவியின் உயிரை காவல்துறை திருப்பி தருமா? மனிதஉரிமை கமிஷன், ஊர்பொதுமக்கள், அந்த சங்கம், இந்த சங்கம் என இப்போது கூச்சலிடுகிறார்கள். ஒரு வாரம் அவர்களை அடித்து உதைக்கும்போது எங்கே போனார்கள் இந்த பொதுநலவாதிகள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள் விஷயமறிந்த உள்ளூர் மக்கள். இது போன்ற ஒவ்வொரு சம்பவத்திலும் உயிர் பலிக்கு பின்னர் தான் இவர்கள் ஒன்றுசேர்ந்து கேள்வி கேட்பார்களா?

போலீஸ் ஸ்டேசனில் ஜட்டியுடன் நிற்க்வைத்து அடிக்கவேண்டும் என எந்த சட்டம் சொல்கிறது? நாட்டை கொளளையடிப்பவனுக்கும் தீவிரவாதிக்கும் ராஜமரியாதை. அதே ஒரு அப்பாவிக்கு ஜட்டியுடன் முட்டி அடி. அப்பாவியிடம் தானே தன் புஜபலத்தை காட்டமுடியும் போலீசால்.

சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசாரின் வரட்டு பலம் அதை விட கொடுமையானது. டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் வருபவனை நிறுத்தி ஆயிரம் கேள்வி கேட்டு 50 ரூபாய் பிச்சையெடுக்கும் அற்ப போலீஸ். ஹைகிலாஸ் கார்களை கண்டால் கைகாட்டகூட பயப்படுகிறது. கொள்ளையர்களும் தீவிரவாதிகளும் டூவிலரில் வருவார்களா? ஹைகிலாஸ் காரில் வருவார்களா?

பிரேக் பிடிக்காத லாரி, கார் பஸ் இப்படி சாலையில அப்பாவி உயிர்களை குடிக்க ஆயிரம் எமன்கள் சுற்றுகிறார்கள். அவர்களை சோதனையிட போலீசுக்கு வக்கும் இல்லை துப்பும் இல்லை.

கத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள் கொள்ளையர்கள். லத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள்.......?

போலீசார் கையில் தடியை கொடுத்தது யார்? சுதந்திரத்துக்கு முன்பிருந்த பல துறைகளும் மாறி விட்டது. ஏன் இன்னும் போலீஸ் துறையில் மட்டும் அதே பிரிட்டீஷ் மனப்பான்மை. இந்தியர்களை அடிமைகளாக நடத்த தான் பிரிட்டிஸ் போலீஸ் பொதுமக்களை அடித்து மிரட்டி தன்மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே நிலை இன்றும் தொடர்கிறது என்றால் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தமே இல்லையே.

மனித உரிமைகள் ஆசியமையம் என்ற நிருவனம் இருதினங்களுக்கு முன்பு(06.08.2008) வெளியிட்ட புள்ளி விபரம்:
1. இந்தியாவில் சராசரியாக தினமும் 4 பேர் லாக்கப்பில் இறக்கிறார்கள்.
2. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7,468 பேர் லாக்கப்பில் இறந்துள்ளார்கள்.
(இவர்கள் அனைவருமே விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்)

இங்கு காவல்துறையின் சேவைபற்றியும் வீரதீர சாகசங்கள் பற்றியும் பட்டியலிட சிலர் முன்வரலாம். அப்படிப்பட்ட சிறந்த காவல்துறையினர் முதலில் அவர்கள் துறையை களையெடுக்கட்டும்., பிறகு பொதுமக்கள் மீது கைவைக்கட்டும்.

Read more...

காமத்தின் எல்லை பெற்ற குழந்தையா? வேண்டாம் தாங்காது பூமி

Wednesday, August 6, 2008

அமலு, அமலி, அமல்யா, அமல் இப்படி அம்சமான அழகு பெயர்களை பார்த்து பார்த்து வைத்த தந்தையே அவர்களுக்கு எமனானான். அதுவும் கொலையோடு நிற்கவில்லை. பெற்ற மகளை தன் காம பசிக்கு இறையாக்கிய கொடூரனாகியிருக்கிறான்.

காதலித்து கைபிடித்த மனைவியையும் அழகான நான்கு பெண் குழந்தைகளையும் சர்வசாதாரணமாக கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணக்க ஒரு ஆண் துணிகிறான் என்றால் அதன் பின்னனியில் இருப்பது என்ன?

கேரளமாநிலம் பாலக்காடு, பட்டாம்பி அருகிலுள்ளது ஆமையூர் கிராமம். ரஜிகுமார்(40)மனைவி லிசி(39). இருவரும் 3,8,10,12 வயதுகளில் நான்கு குழந்தைகளுடன் வசிவந்த தம்பதிகள். இனி அந்த கொடூர சம்பவம் 23.07.2008 முதல்...

தொடர்ந்து இரண்டு நாட்களாக பூட்டபட்டிருந்த ரஜிகுமாரின் வீட்டில் இருந்த துர்நாற்றம். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசுக்கு தகவல் தந்தனர். பட்டாம்பி போலிசார் கதவை உடைத்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். 2 பெண் குழந்தைகள்( அமலு(12) அமலி(10)) கழுத்து நெறித்து கொல்லப்பட்டு கிடந்தனர். பிரேத பரிசோதனையில் அமலு பல முறை (இறப்புக்கு முன்னும் பின்னும்) பாலியல் பலாத்காரம் செய்யபட்டிருப்பது தெரியவந்தது. இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த பின்னும் பெற்றோரை காணாதது சந்தேகத்தை கிளப்பியது. இரண்டு நாட்கள் நீண்ட தேடலில் வீட்டின் செப்டிக் டேங்கில் மேலும் 3 பிணங்கள். லிசி, அமல் அமல்யா மூன்றுபேர் பிணமும் அழுகிய நிலையில். ரஜிகுமார் மட்டும் தலைமாறைவாக இருந்தான். 28.07.08.,ல் கோட்டயத்தில் வைத்து பொதுமக்கள் உதவியுடன் போலீசிடம் பிடிபட்டான் ரஜிகுமார். அவனது வாக்குமூலம் தான் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தந்தது.

வீட்டுக்கு அருகிலேயே இருந்த தன் கள்ளகாதலியை மணப்பதற்காக மனைவி லிசியையும், வீட்டில் இருந்த அமல்(8), அமல்யா(3) குழந்தைகளையும் கைதுண்டால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறான். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பிணங்களை செப்டிக்டேங்கில் வீசியுள்ளான். ஒரு வாரம் யாருக்கும் சந்தேகம் வராதபடி வழக்கம்போல வேலைக்கும் சென்றிருக்கிறான். பின்னர் தன் கள்ளகாதலியிடம் விஷயத்தை சொல்லி வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்திருக்கிறான். ஆனால் கள்ளகாதலி திருமணத்திற்கு தயக்கம் காட்டினாள். கொலைகள் வெளியில் தெறியாததால் விடுதியில் தங்கி படிக்கும் அமலு(12), அமலி(8) குழந்தைகளை அழைத்து வந்து அவர்களையும் கொன்றிருக்கிறான். கொலைக்கு முன்னும் பின்னும் அமலுவை தன் காமபசிக்கு இறையாக்கியிருக்கிறான். கொலை குற்றங்கள் வெளியே வந்ததும் கள்ள காதலி ரஜிகுமாரை மணக்க மறுத்ததோடு, போலீசிலும் சரணடைந்தாள். ரஜிகுமார் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த செல்போன் உட்பட பொருட்களையும் போலீசிடம் ஒப்படைத்தாள்.

சம்பவத்திற்கு தான்மட்டும் காரணமல்ல. தன் கடைசி குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகம் தான் இன்னொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பை ஏற்படுத்தியது. அதற்கு தடையாக இருந்ததால் தான் அத்தனைபேரையும் கொன்றேன்., என்று சர்வசாதாரணமாக வாக்குமூலம் அளித்திருக்கிறான் ரஜிகுமார்.

ஒரு தந்தைக்கு உரிய அனைத்து குடும்ப பொருப்புக்களையும் முறையாக செய்பவன். தங்குவதற்கு நல்லவீடு, குழந்தைகளுக்கு ஆங்கிலவழி கல்வி, எந்த சண்டை சச்சரவுகளோ, கூச்சல் குழப்பங்களோ வீதிக்கு வராத குடும்பம். மளிகை, காய்கறி, பால் என அனைத்தும் வாங்க மனைவிக்கு உதவும் கணவன். அடுத்துள்ளவர்களிடன் மிகநாகரீகமாக பழகும் ஆண். இப்படி தான் ஊரார் பலரும் ரஜிகுமாரை பற்றி சொல்கின்றனர். ஆனால் இத்தனை கொடூரங்களையும் தான் தான் செய்தேன் என்ற ரஜிகுமாரின் வாக்குமூலத்தில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் ஊர்மக்கள்.

அதிர்ச்சி ஊர் மக்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளை தம் வாழ்க்கையின் அர்த்தங்களாக நினைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தான். வெளியுலகுக்கு அமைதியாக காட்சியளித்துவிட்டு, உள்ளுக்குள் இத்தனை கோரங்களை கொண்டிருக்கும் குடும்பங்கள் உருவாக காரணங்கள் தான் என்ன? யாரை குற்றம் சொல்வது?



1. ரஜிகுமார் போன்ற ஆண்களையா?
2. கள்ளகாதலி போன்ற பெண்களையா?
3. லிசி போன்ற மனைவிகளையா?
4. திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என தெரிந்தும் காதல்(காமம்) வலை வீசும் நபர்கள் அதிகரிப்பதையா?

அமலு, அமலி, அமல், அமல்யா போன்று இன்னொரு குழந்தை பலியாக கூடாது. காமத்தின் எல்லை மனைவியை தாண்டி, மாற்று பெண்களை தாண்டி, ஒரினசேர்க்கையை தாண்டி, பெற்ற குழந்தைகள் வரை வரவேண்டுமா? இதுபோன்ற பாவங்களுக்கு ஆண்களோடு பெண்களும் துணைபோனால் சந்ததிகள் என்ன ஆகும்? பெண்களே நீங்களாவது யோசியுங்கள்..... *******************************************************************

அறிவகத்தில் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள், நபிகளும் இயேசுவும் செய்த தவறு என்ன?, அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி(அவரின் பதிலுடன்) சமுதாய விழிப்புணர்வு விரும்பிகள் கண்டீப்பாக படித்து ஆலோசனைகளை தாருங்கள்.

Read more...

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP